உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரின் மகன் காங்கிரசில் இருந்து விலகல்

டேராடூன்: உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் புவன் சந்திர கந்தூரியின் மகன் மனீஸ் கந்தூரி. இவர் கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்,‘‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். எந்தவொரு தனிப்பட்ட ஆதாயத்தையும் எதிர்பாராமல் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு