பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு புதியதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
மேலும், புதியதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் தரமானதாகவும், விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார். நிகழ்வின்போது, இளைஞரணி நிர்வாகி அன்புராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.