அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “2004-ம் ஆண்டைய மதரஸா சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் தவறாக புரிந்துகொண்டுள்ளது. மதரஸா கல்வி வாரியச் சட்டம் மதக்கல்வி கற்பிப்பது தொடர்பான எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை. மதரஸாக்களை ஒழுங்குப்படுத்துவதே மதரஸா கல்வி வாரியச் சட்டத்தின் நோக்கமாகும். மதரஸாவில் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டும் என்றால் மதரஸா சட்டத்தை ரத்து செய்வது தீர்வாகாது.
மதரஸா மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் எனில் அதற்குரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பால் மதரஸாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடைவிதித்து பின் உ.பி. மாநில மற்றும் ஒன்றிய அரசு பதில் தரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.