உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு நேரிட்டது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.