உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸில் இருந்து ஓட்டுநரால் வெளியே தூக்கி வீசப்பட்ட நோயாளி உயிரிழந்துள்ளார். நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியும், அவரது மனைவியும் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் சென்றகொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் நோயாளியை தூக்கி வெளியே வீசினர். நோயாளியை ஆம்புலன்சில் இருந்து வீசிவிட்டு அவரது மனைவியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.