சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அவர் சம்பந்திக்கும், உறவினர்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு செய்துள்ளனர். டெண்டர் முறைகேடு புகாரில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் நிரபராதி என்று விடுவித்து விட்டதைப்போல பேசி வருகிறார். தான் ஏதோ உத்தம புத்திரர் போல எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.