இதனால் அந்த பகுதியில் காட்டுயானை போன்ற வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை புகுந்த காட்டுயானை ஒன்று அங்குள்ள நியாயவிலை கடையின் ஜன்னலை உடைத்து பருப்பு சர்க்கரை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு பீதி அடைந்த கிராமமக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் அதை விரட்டி அடித்தனர்.