இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், வலது கையில் ஈட்டியை ஏந்தியவாறும், இடது கையில் கேடயத்தை தாங்கியவாறும் பொறிக்கப்பட்டுள்ளது. கேடயத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களில், ஈட்டியை வீசும் நிலையில் காணப்படுவது அரிதானது.
இதன் வடிவமைப்பை பார்க்கும் போது, இது 16ம் நூற்றாண்டை சார்ந்தது என தெரிய வருகிறது. இந்த நடுகல்லை இவ்விடத்திலேயே பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஊரின் தொன்மையை அனைவரும் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, சதானந்த கிருஷ்ணகுமார், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், பிரகாஷ், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.