உதகை அருகே குறிஞ்சி மலர் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளி ஆட்கள் யாரும் செல்லக் கூடாது: வனத்துறை உத்தரவு

நீலகிரி: உதகை அருகே குறிஞ்சி மலர் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளி ஆட்கள் யாரும் செல்லக் கூடாது என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எப்பநாடு அருகே பிக்கப் பத்தி மந்து மலை பகுதியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் விலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய ஜனதா தள மாஜி எம்எல்சி வீட்டில் என்ஐஏ சோதனை

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் – காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சாடல்

மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு