சென்னை: உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று காலை உதகை கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் குதிரை பந்தய மைதானத்தை மீட்டனர்.ரேஸ் கோர்ஸில் அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்து, தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைத்தனர். அரசு நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் ஐகோர்ட்டில் இன்று காலை அவசர முறையீடு செய்துள்ளனர்.