உதகை: உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பாலம் கட்டும் பணியால் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். சிறிய பாலம் கட்டும் பணி 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது என வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். உதகையில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.