Monday, July 8, 2024
Home » உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு

by Lavanya

உதகை: உதகை படகு இல்லத்தில் படகு ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மோட்டார், துடுப்பு படகு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நூற்றுக்கணக்கான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50 மோட்டார் படகுகள், 20-க்கும் மேற்பட்ட துடுப்பு படகுகள் உள்ளன; படகுகளை 50-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இயக்கி வருகின்றனர். ஸ்கேனர் மூலம் வருகை பதிவை காலை 8 மணிக்கு பதிவு செய்ய படகு இல்ல நிர்வாகம் உத்தரவிட்டது. ஸ்கேனர் மூலம் வருகை பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த படகு ஓட்டுநர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi