இந்நிலையில் தொழில் சரியாக நடைபெறாததால் அவர், வட்டி கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 25ம்தேதி விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.