உசிலம்பட்டி அருகே கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி வழக்கு

மதுரை : மதுரை உசிலம்பட்டி அருகே கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெள்ளக்காரன்பட்டி மலையில் கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி ரேவதி என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்