பாக்தாத்: சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலியாகினர். அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈராக்கில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர். ஈராக்கின் இறையாண்மையை மீறிவிட்டதாக அமெரிக்காவுக்கு ஈராக் பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.