இந்நிலையில் லக்னோவை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஜய் பகதூர், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று சமாஜ்வாடியில் சேர்ந்தார். அவரை கட்சிக்கு வரவேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “உத்தரபிரதேச பாஜவில் உள்கட்சி பூசல் உள்ளது. பதவிகளுக்காக கட்சியினர் சண்டை போடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரவைக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சமாஜ்வாடி சிறப்பாக செயல்பட்டு மக்களவை தேர்தலை விட பெரிய வெற்றி பெறும்” என தெரிவித்தார்.