கடந்த மாதம் ஹாஜ்பூர் மற்றும் காஜூரியா ஆகிய இடங்களில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இப்படி தொடர்ந்து பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த மர்ம நபரை பிடிக்க ஐஜி ராகேஷ் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த துப்புகளின் அடிப்படையில் மர்ம நபரின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய குல்தீப்(35) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 6 பெண்களை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.