கோரக்பூர்: மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்கள் ஜெயஸ்ரீ ராகுல்(28) மற்றும் ராக்கி தாஸ்(23). இவர்கள் உபியின் தியோரியாவில் உள்ள இசைக்குழுவில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் சேர்ந்து வாழ விரும்பினர். இதை தொடர்ந்து,சில நாட்களுக்கு முன் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள திர்கேஸ்வர்நாத் கோயிலில் திருமணம் செய்து கொள்வதற்கு இருவரும் சென்றனர். ஆனால், திருமணத்தை நடத்தி வைக்க முடியாது என அங்குள்ள கோயில் பூசாரி மறுத்து விட்டார். அந்த ஜோடி தங்களுடைய நண்பர்கள் மூலம் நோட்டரியை அணுகி திருமண சான்றிதழ் பெற்றனர். அதன் பிறகு கடந்த திங்களன்று மஜோலிராஜ் பகுதியில் உள்ள பாகதா பவானி கோயில் பூசாரி முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.