உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீச்சு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை மஹபோதி எக்ஸ்பிரஸ் ரயில் மிர்சாபூர் ரயில்நிலையத்தை நெருங்கும் நிலையில் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசியுள்ளனர். இதேபோல் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் டெல்லியில் இருந்து வந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசப்பட்டுள்ளது. இதில் பயணி ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு