அப்போது பேசிய அமித் ஷா, ‘‘உத்தரப்பிரதேசத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பந்தல்கண்ட்டில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கினார். இப்போது இங்கு பீரங்கி குண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பாகிஸ்தான் ஏதேனும் தவறு செய்தால் பந்தல்கண்ட்டில் செய்யப்பட்ட குண்டுகள் அந்நாட்டை அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் ” என்றார்.