சஹரான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் சஹரன்பூரில் விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் அபிஷேக் பண்டிட்(28). சத்ருகன் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே நடந்து வந்தார். அப்போது பதுங்கி இருந்த மர்மநபர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றான். இதனை தொடர்ந்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உபியில் விஎச்பி தலைவர் மீது துப்பாக்கி சூடு
previous post