இதுகுறித்து கோயில் தலைமை அர்ச்சகர் ராம்மு குரு கூறுகையில், ‘சாயிபாபாவை சரியான அறிவு இல்லாமல் வழிபடுகிறார்கள். இது சாஸ்திரப்படி தடைசெய்யப்பட்டுள்ளது’ என்றார். அன்னபூர்ணா கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர் பூரி கூறுகையில், ‘சாய்பாபாவை வழிபடுவது குறித்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை’ என்றார்.
அயோத்தி ஹனுமன்கர்ஹி கோவிலின் மஹந்த் ராஜு தாஸ் கூறுகையில்,’ சாய்பாபா ஒரு மத போதகர், ஒரு பெரியநபர், ஆனால் அவரால் கடவுளாக இருக்க முடியாது. எனவே அவரது சிலையை கோயிலில் இருந்து அகற்றியவர்களுக்கு நன்றி’ என்றார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் உபியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.