இந்த ஆளில்லா விமானங்களை இந்திய ராணுவம் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த ஆளில்லா விமானங்களை கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும் போதும் பயன்படுத்த முடியும் என்றும், ஒரு கி.மீ. உயரம் வரை சென்று பார்க்கக்கூடிய வகையில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆளில்லா விமானங்களின் எடை சுமார் 100 கிலோ வரை உள்ளது. 15 முதல் 20 கிலோ வரையிலான மருந்து, உணவு பொருட்கள் மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.’’ என்று அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. நிறுவன பேராசிரியர்கள் தெரிவித்தனர்.