இதனால் கொலைகள் பெருமளவில் குறைந்துள்ளன. வெள்ளப் பகுதிகளில் நடந்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும், தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பல்வேறு சம்பவங்களில் தமிழக போலீசார் திறம்பட செயல்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறைச் செயலாளர் அமுதா ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், லட்சத்தீவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி பாதுகாப்புக்கு தமிழகத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஒன்றிய உள்துறையில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, எஸ்பிக்கள் அருண் பாலகோபாலன், ஹரிகரன் பிரசாத் மற்றும் 4 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் லட்சத்தீவுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டனர். அதை தொடர்ந்து அவர்கள் நேற்று தமிழகம் திரும்பினார். லட்சத்தீவுக்கு பிரதமர் மோடியின் பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு தமிழக போலீசார் சென்றது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.