டெல்லி: நீட் தேவையில்லை என்பதற்கு நியாயமான காரணங்களை முன்வைத்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். நீட் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்பதை பல மாநிலங்கள் தற்போது உணர்ந்து வருகின்றன. நீட் தேர்வை திரும்பப் பெறும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.