ராமேஷ்வரம் தனுஷ்கோடி திட்டத்தை கைவிட மாநில அரசு எங்களுக்கு கடிதம் அனுப்பினர். ஒன்றிய அரசு பாகுபாடின்றி செயல்படுகிறது. அறிவித்த திட்டத்தை செயலாக்க முனைப்பு காட்டுகிறோம். கடந்த ஆண்டு 6080 கோடி, இந்த ஆண்டு 6362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 8000 கோடி வரை ஒதுக்க தயாராக உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 5.02 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு 1.30 லட்சம் பேர் பணியமர்த்தினோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பல்வேறு விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழிற்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் எல்லாம் அறிவிப்புகளாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு திட்டத்தைக் கூட முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதும் அறிவிப்புகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.