இதே நிலைதான் தற்போதும் கேரளாவில் நடந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே கேரள மாநிலத்திற்கு நாங்கள் தகவல் தெரிவித்து இருந்தோம் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என அவையிலேயே ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். அடுத்த நாளே கேரள முதல்வர் பினராய் விஜயன், இது உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது கிடையாது. தகவல் தந்து விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்வதையை ஒன்றிய அரசு வழக்கமாக கொண்டுள்ளது. நாட்டில் எந்தவொரு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அதை தேசிய பேரிடராக அறிவிக்கத் தயாராக இல்லாத ஒன்றிய அரசே தேசிய பேரிடராக இருந்துவருகிறது. மாநிலங்களுக்கு தேவையான நிதியை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு நாள் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு நாள் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது. நியாயமாக ஒன்றிய அரசு நமக்கு தர வேண்டிய நிதியை கொடுத்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.