நிதிஷ் எப்போதுமே தனது கூட்டணியை மாற்றி கொண்டு லாலு பிரசாத்தை தவறாக வழி நடத்துகிறார். மகாபந்தன் கூட்டணிக்காக பாஜவை கைவிட்ட நிதிஷ், லாலு தண்டிக்கப்பட வேண்டும். ராகுல் காந்தியை மக்கள் தலைவராக காண்பிக்க காங்கிரஸ் எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. பீகார் எப்போதும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்தவர்கள். 2024 மக்களவை தேர்தலில் ஊழல் அரசியல் தலைவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்” இவ்வாறு தெரிவித்தார்.