புதுடெல்லி: நிதி பற்றாக்குறையை சமாளிக்க 2024-25ம் நிதியாண்டின் 2ம் பாதியில் ரூ.6.61 லட்சம் கோடி கடன் திரட்ட ஒன்றிய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தொகையானது, ஆண்டு முழுவதும் மொத்த சந்தைக் கடனாக கணக்கிடப்பட்ட ரூ.14.01 லட்சம் கோடியில் 47.2 சதவீதம். இது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ.20,000 கோடி பசுமைப் பத்திரங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.