இதன் அடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் எழுதிய கடிதத்தில், ‘‘2023-2024ம் நிதியாண்டில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு ரூ.1.17லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது அரசின் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெளிப்படை தன்மையை உறுதி செய்து சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.