திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணியை தடுத்து ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்தூர் ஒன்றிய பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலம் கட்டக்கூடாது என்று கூறி ஒப்பந்ததாரர் திருப்பதிக்கு அய்யனவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் திருப்பதி புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து ஒன்றிய பாஜக தலைவர் அய்யனவேலை கைது செய்தனர்.