சேலம்: ஒன்றிய அரசை கண்டித்து எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசின் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். சிறு, குறு தொழில்கள் தொடர்பாக வருமான வரி சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.