சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில உரிமை, கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பொன்னேரியில் மார்க்சிஸ்ட் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.