சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பொன்னேரியில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.