இதுகுறித்து மின்வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இன்றும் மற்றும் நாளையும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். மேலும் மின்விநியோகத்தை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், ஒருங்கிணைத்து விரைவாக மறுசீரமைப்பு செய்தல் ஆகிய பணிகளை துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் மேற்கொள்ளவும், பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.