போளிவாக்கம் சித்தேரியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கத்தில் உள்ள சித்தேரியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போளிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கௌபாஷாவுக்கு பொது மக்கள் கொடுத்த தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அழுகிய நிலையில் சடலம் மிதந்து கொண்டிருப்பதை உறுதி செய்த போளிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர், மணவாளநகர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏரியில் விழுந்து குறைந்தது 5 நாட்களாவது ஆகியிருக்கும் என கூறப்படுகிறது. சித்தேரியில் சடலமாக கிடந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்து வீசிவிட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரசு பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடல்

காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை