தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏரியில் விழுந்து குறைந்தது 5 நாட்களாவது ஆகியிருக்கும் என கூறப்படுகிறது. சித்தேரியில் சடலமாக கிடந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்து வீசிவிட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.