சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். வருமான வரி முறையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒன்றிய பட்ஜெட் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிடாத ஒரு அறிக்கையாகத்தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இன்றி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது சாத்தியப்படுமா? என்பது கேள்விக்குறி என்று கூறியுள்ளார்.