டெல்லி: வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். பாஜக பரப்பிய வேலையின்மை எனும் நோயால், இளைஞர்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது. இந்தியாவிலேயே ஹரியானாவில்தான் வேலையின்மை பிரச்சனை அதிகம் உள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சிறு தொழில்களின் முதுகெலும்பை பாஜக அரசு உடைத்தது என்றும் கூறினார்.