இதில், சாலையின் ஒரு புறம் குழாய் பதிக்கப்பட்டு குழி மூடப்பட்டது.மறுபுறம் குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வழியாக தார் மற்றும் ஜல்லி கலவையை ஏற்றிச்சென்ற லாரி முறையாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியில் சிக்கி நின்றது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த தார், ஜல்லி கலவை மற்றொரு டிராக்டர் வரவழைக்கப்பட்டு, அதில் ஏற்றப்பட்டது. பின்னர், லாரி மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.