தேர்வை, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். சென்னையில் 36 மையங்களில் மொத்தம் 24,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு; ஜூன் 14ஆம் தேதி முடிவு வெளியாகிறது.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும், மாணவர்கள் மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைக்குp பின்னரே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.