கேரளா: மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று இருந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.3.66 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சடலங்களை வழங்கி உள்ளது. 2008ல் இருந்து இதுவரை கேட்பாரற்று இருந்த 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.