அதற்கு சமகால பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு செயல்பட முடியாத ஐ.நா. அமைப்பு ஒரு பழைய நிறுவனம் போன்றது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகள் என பல தரப்பினரும் புதிய மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவும், ஆனால் ஐ.நா. அதே பழைய அமைப்பாகவே இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். முக்கிய விவகாரங்களில் தலையிடாமல் ஐ.நா.விலகி கொள்ளும்போது ஒவ்வொரு நாடும் அவர்களுக்கான தீர்வை தனியே தேடி கொள்வதாகவும் அவர் சாடியுள்ளார்.