இந்நிலையில் நேற்று முன்தினமும் நேற்றும் ரமணியின் பெற்றோர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் என வந்துள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் கட்டிலில் ரமணி படுகொலை செய்யப்பட்டு, முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். புகாரின்படி எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். இதில் வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களுடன் ரமணியின் கணவர் அசோக் தலைமறைவானது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.