மொத்தம் 25 பாரம்பரிய அடையாளங்களை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா ஏவுகணை வீசி உள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 4 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இடிந்த போன தேவாலயத்தில் இருந்து புனித பொருட்களையும், ஆவணங்களையும் மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ‘உக்ரைனின் பாரம்பரியம் இப்போது எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது’ என மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ‘ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி விடும் தளங்களை குறிவைத்து தாக்கி உள்ளோம்’ என கூறி உள்ளது.