ஈரோடு: உக்ரைனில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்த டெல்லி மருத்துவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக காவல்துறை வாய்ப்பளித்தும் மனுதாரர் ஆஜராகவில்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக பதிவான வலையில் முன்ஜாமீன் கோரி மருத்துவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஜோஹிதாதித்யா, அவரது தந்தை மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்த நிலையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.