திருப்பூர்: உடுமலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். பழனியை சேர்ந்த தியாகராஜன், மனைவி பிரீத்தி, மகன் ஜெயபிரியன், தாயார் மனோன்மணி விபத்தில் உயிரிழந்தனர். கிணத்துக்கடவில் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. உடுமலை அருகே புறவழிச்சாலையில் கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது; விபத்தில் 14 பேர் காயமடைந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.