உடுமலை அருகே விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: உடுமலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். பழனியை சேர்ந்த தியாகராஜன், மனைவி பிரீத்தி, மகன் ஜெயபிரியன், தாயார் மனோன்மணி விபத்தில் உயிரிழந்தனர். கிணத்துக்கடவில் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. உடுமலை அருகே புறவழிச்சாலையில் கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது; விபத்தில் 14 பேர் காயமடைந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி

புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கூடுதலாக 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்!