அந்த வகையில் நமது திராவிட முன்னேற்றக்கழக அணி நடந்து முடிந்த மக்களவை தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி, உழைத்து 40க்கு 40 பதக்கங்களையும் வென்று இன்றைக்கு சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை பரிசலீத்த தமிழக மக்களுக்கு இந்த மாமன்றத்தின் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதலமைச்சர் மீது நாங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறோமோ, அதே மாதிரி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அவர் மீது தளராத நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்துள்ளார்கள். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, எப்படி இந்தியாவிலேயே நம்பர் 1 அரசாக திகழ்கிறதோ, அதே போல் முதலமைச்சரால் வழிநடத்தப்படும் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையும் இன்று நம்பர் 1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.