இந்நிகழ்ச்சியையொட்டி மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் 20 ஆயிரம் மக்கள் பங்கேற்க செய்து, பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து, மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் கண்ணன், தம்பு, சத்தியசாய், சிவக்குமார், ஏழுமலை, சிற்றரசு, ராமச்சந்திரன், பாபு, பேரூர் செயலாளர்கள் எழிலரசன், சுந்தரமூர்த்தி, கருங்குழி பேரூராட்சி தலைவர் தசரதன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.