சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம். சொல்லாற்றலில் தலைவர் கலைஞருக்கு அவரே நேர். கலைஞர் 100-ல் புதிய பேச்சாளர்களை அடையாளம் காணவும் தமிழ்ச்சமூகத்துக்கு அடையாளம் காட்டவும் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் திமுக இளைஞர் அணி நடத்தவுள்ள ‘‘என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி” வெற்றி பெற வாழ்த்துகிறேன். எத்தனையோ தலைவர்களை அடையாளம் காட்டிய மேடை உங்களுக்காக காத்திருக்கிறது. உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.