நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம், இன்று (ஆக.04) திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. சாலை பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.